நலம் புனைந்து உரைத்தல் திருக்குறள்

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்

குறள் எண்: 1111 அதிகாரம்: நலம் புனைந்து உரைத்தல்
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று

குறள் எண்: 1112 அதிகாரம்: நலம் புனைந்து உரைத்தல்
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு

குறள் எண்: 1113 அதிகாரம்: நலம் புனைந்து உரைத்தல்
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று

குறள் எண்: 1114 அதிகாரம்: நலம் புனைந்து உரைத்தல்
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை

குறள் எண்: 1115 அதிகாரம்: நலம் புனைந்து உரைத்தல்
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்

குறள் எண்: 1116 அதிகாரம்: நலம் புனைந்து உரைத்தல்
அறுவாய் நிறைந்த அவிர்மத஧ க்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து

குறள் எண்: 1117 அதிகாரம்: நலம் புனைந்து உரைத்தல்
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மத஧

குறள் எண்: 1118 அதிகாரம்: நலம் புனைந்து உரைத்தல்
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி

குறள் எண்: 1119 அதிகாரம்: நலம் புனைந்து உரைத்தல்
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்

குறள் எண்: 1120 அதிகாரம்: நலம் புனைந்து உரைத்தல்

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...