மனக்குழப்பம் இருக்கும் போது மௌனமாக இருங்கள்.. மனக்கஷ்டம் இருக்கும் போது தைரியமாக இருப்போம்.
அதிகமான கஷ்டங்களையும் நஷ்டங்களையும் அடைந்த பிறகு தான் மனிதன் அதிகமான அடக்கத்தையும் அறிவையும் பெறுகிறான்.. கஷ்டம் வந்தால் கலங்காதே.. துணிந்து நில்.!
பார்வையில் நெருப்பைக் கொள்.. முகத்தில் துணிச்சலைக் கொள்.. ஆடைகளில் ஒழுக்கம் கொள்.. உன்னைப் புகழ்வோர் மீது சந்தேகம் கொள்.. வார்த்தையில் உண்மையைக் கொள்.. உனது பாதுகாப்பு நீயே என்று உணர்ந்து கொள்.!
புரியாத விஷயத்தைப் புகழ்வது தப்பு. இகழ்வதோ அதைவிட பெரிய தப்பு.
பகைவனை மன்னிக்காதவன் உலகில் உயர்ந்த இன்பத்தை இன்னும் அறியாதவனே.
தெரிந்ததைச் சொல்லுங்கள், தவறில்லை. ஆனால் எல்லாம் தெரிந்ததாக நினைத்துச் சொல்லாதீர்கள்.
எல்லா மனிதர்களும் சமமானவர்களே பிறப்பினால் உயர்வடைவதில்லை. ஆனால் தங்களின் நல்ல பண்புகளினாலேயே உயர்வடைகிறார்கள்.
வாழ்க்கையில் முழு திருப்தியை எதிர்பார்க்கின்றீர்களா? உங்களால் ஒருபோதும் மனநிறைவுடன் இருக்க முடியாது.
யாருக்காவும் எதற்காகவும் உங்களின் மகிழ்ச்சிக்கான காரணங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
தாழ்ந்த வேலை செய்தால் தாழ்ந்தவர்களல்ல உயர்ந்த வேலை செய்தால் உயர்ந்தவர்களல்ல. எந்த வேலையைச் செய்கிறோம் என்பதைவிட, எப்படிச் செய்கிறோம் என்பதைப் பொருத்தே எதனையும் மதிப்பிட வேண்டும்.
தமது ஆற்றல் எது என்பதைச் சரியாக உணர்ந்து அந்தப் பாதையில் நம்பிக்கையுடன் தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் எவரையும் துன்பம் நெருங்குவதே இல்லை.
அச்சம் என்பது வளர்வதற்காக வாழ்க்கை ஏற்படுத்தியிருக்கும் வாய்ப்புகளில் ஒன்று. உங்களை அச்சத்திற்குள்ளாக்கும் விஷயங்களை ஆவலுடன் எதிர்கொள்ளுங்கள்.
மோசமான மனநிலையில் இருக்கும்போது, மிக முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம். பொறுமையாய் காத்திருங்கள். புயல் கடக்கும், வசந்தம் வீசும்.
பயம் என்பது ஒரு அருமருந்து
தேவையான அளவு இருந்தால் வாழ்வை நல் வழிப்படுத்தும்
அளவுக்கு மீறினால் விசமாகி வாழ்க்கையையே அழித்து விடும்.
எத்தனை துன்பங்கள் வந்தாலும்
அதை உன் தன்னம்பிக்கையால் வென்றுவிடு..
வாழ்க்கை வாழ்வதற்கே.!
தவறிழைப்பது உங்களை தோல்வியை சந்திக்க வைக்காது..
ஆனால் அந்த தவறுகளை திருத்தி
வாழ முயற்சிக்காமல் இருப்பது தான்
மிகப்பெரிய தோல்வியை சந்திக்க வைக்கும்.
இந்த நிலை நாளையும் தொடருமென அமைதியாக இருந்தால்..
இனி வரும் காலங்கள் எல்லாம் இப்படியே இருக்கும்..
உன் நிலையை மாற்ற உன்னால் தான் முடியும்.
வருவதை எதிர்கொள்ளும் மனதைரியமே சரியான வழிகாட்டும்..
குழப்பமும் பயமும் விட்டொழியுங்கள் உங்களால் முடியும்..
எவ்வளவு பெரிய பிரச்சனையையும் தன்னம்பிக்கையால் வெல்ல முடியும்.
ஆயிரம் முறை தோற்றாலும் மீண்டும் முயன்று பார்..
பிரச்சனைகளுக்கு தீர்வு அதை எதிர் கொள்வது.
மகிழ்ச்சி என்பது உன் வீட்டில் விளைவது மற்றவர் தோட்டத்தில் அதைத் தேட வேண்டியதில்லை.
தவறாக செய்து விடுவமோ என்ற பயத்தில் இருப்பவனுக்கு..
நன்றாக செய்வதற்கான வாய்ப்பு கிடைப்பதே இல்லை.
உதவியவர்கள் நன்றிக்குரியவர்கள் என்றும் நினைவில் வை..
உதவாதவர்கள் உன் வெற்றிக்குரியவர்கள் என்றும் மறந்து விடாதே.!
நீங்கள் செய்த தவறை ஒத்துக் கொள்ள முயலுங்கள் விரைவில் சரி செய்து கொள்ளலாம்.. ஆனால் செய்த தவறை தவறே இல்லை என்று சாதிக்காதீர்கள் எப்போதுமே சரி செய்ய முடியாது.
தீமையும் நன்மையும் பிறர் தர வருவது இல்லை..
அதை நீங்களே உருவாக்கிக் கொள்கிறீர்கள்.