நம்ம பண்ணுரது சிலருக்கு கடுப்பு ஏறுதுனா அப்போ நமக்கு பிடிச்சத நம்ம சரியா பண்ணுறோம்னு அர்த்தம்
வாழ்க்கையில் வந்துட்டு போற ஓவ்வொரு உறவும் மறக்க முடியாத ஏதோ ஒரு நினைவுகளை பொக்கிஷமாக தந்து விட்டு தான் செல்கிறார்கள்
மதிப்பவர்களை மனதில் நிறுத்து உன்னை மிதிக்க நினைப்பவர்களை காலடியில் கிடத்து
அவமானங்களை தேடித் தேடிக் கொடுக்கும் பொழுது அவர்களின் முகவரிகளை சேகரித்து வையுங்கள் வெற்றி மேடைக்கான பத்திரிக்கைகளை அனுப்புவதற்காக
அருகில் இருப்பவர்களின் பாசத்தை உணராமல் தொலைவில் இருப்பவர்களின் அன்பை தேடிக்கொண்டு இருக்கிறோம் தொலைபேசியில்
தூண்டிலுக்கு தப்பிய மீன் துண்டாவதில் இருந்தும் தப்பி விடும்
அன்பு நீரை போன்றது இறுக்கிப் பிடிக்க நினைத்தால் இறுதியில் எதுவும் மிஞ்சாது
ஒலிக்கு முன் ஒளி வருகிறது இது ஒரு அறிவியல் உண்மை அதனால் தான் பேசுவதற்கு முன் புன்னகைப்பவர்கள் நம் மனதில் முதலில் இடம்பிடித்து விடுகிறார்கள்
வ(ழி)லியில் வாழ்க்கையை தேடாதீர்கள் வாழ்க்கையிலும் வ(லி)ழிகள் உண்டென கடந்துவிடுங்கள்
பிறருக்காக இரக்கப்படுவதில் தவறில்லை ஆனால் நாம் ஆடாய் இருக்கும் பட்சத்தில் ஓநாய்க்காக வருந்துவது என்பது முட்டாள்தனமே
வட்டம் போட்டு வாழ்வதில் தவறு இல்லை ஆனால் அந்த வட்டம் மட்டுமே வாழ்க்கை என்று நினைப்பது தான் தவறு
எல்லாம் எனதாகவேண்டும் என்பதை விட எனதானது எல்லாம் நிலையானதாக வேண்டும் என்று வாழ்வதே இன்பம்
சில சமயங்களில் நம் தலைகனத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் இல்யென்றால் நம் சுயமரியாதை என்ற ஓன்றை இழக்க நேரிடும்
நாலு பேர் நம்மை கவனிக்கிறார்கள் என்கிற எண்ணம் எழாதவரை நாம் நாமாகத்தான் இருக்கிறோம்
அன்று வயதைப் பார்த்து வந்த மரியாதை இன்று வசதியை பார்த்து மட்டுமே வருகிறது
உரசிக்கொண்டே இருக்கும் காதலை விட உள்ளத்தில் உள்ளதை உரையாடும் காதல் வலிமையானது
என்னதான் நமக்கு நீச்சல் தெரிந்திருந்தாலும் சாக்கடையில் விழுந்து விட்டால் எழுந்து வரவேண்டுமே தவிர அங்கும் நீச்சல் அடிக்கக் கூடாது
தந்தைக்கும் கடவுளுக்கும் சிறு வித்தியாசம் தான் எப்பவுமே கண்ணுக்கு தெரியாதவர் கடவுள் இருக்கும் வரை தெரியாதவர் தந்தை
மனசாட்சிக்கு பதில் சொல்ல முடியாம தவிக்கிறத விட பெரிய தண்டனை வாழ்க்கையில வேற எதாகவும் இருந்திட முடியாது
தவறு நம்மிடம் இருந்தால் நம்மை விட பெரிய வழக்கறிஞர் யாருமில்லை தவறு அடுத்தவரிடம் இருந்தால் நம்மை விட பெரிய நீதிபதி யாருமில்லை
ஏமாற்றி விட்டதாய் நினைத்து ஏமாந்து விடுகின்ற வாழ்க்கையில் தான் சொல்ல முடியா சோகங்களும் காயங்களும் நிரம்பி கிடக்கின்றன
எண்ணங்கள் பிழையானால் சிறகு அடிக்கும் பட்டாம் பூச்சியும் சிலந்தி வலைக்குள் சிக்கிக்கொள்ளும்
பலம் இருக்குன்னு எதிரியையும் பணம் இருக்குன்னு செலவையும் சம்பாதிக்க கூடாது
உலகமே நினைத்தாலும் ஒரு உண்மையான அன்பைத் தரமுடியாது ஆனால் ஒரு உண்மையான அன்பு நினைத்தால் ஒரு உலகத்தையே தர முடியும்
சொல்ல முடியாத சோகங்களும் நினைவுகளும் ஒவ்வொருவர் மனதிலும் உண்டு யாரும் மறந்து வாழவில்லை மறைத்து தான் வாழ்கிறோம்