இலக்குகள் கடினமாகும் போது முயற்சியும் பயிற்சியும் அதிகமாகவே தேவைப்படுகிறது தன்னம்பிக்கை கொண்டு செயல்படு வெற்றி மாலை உன்னை தேடி வரும் தருணம் இது
வாழ்க்கைக்கு உதவாத அனைத்தும் காற்றில் பறந்துவரும் தூசியே தட்டி விட்டுட்டு போயிட்டேருக்கணும்
நம்மை அலட்சியமாக நினைப்பவர்களை விட்டு துணிந்து விலகுங்கள் நம்மை பொக்கிஷமாக நினைப்பவர்கள் இருப்பார்கள் அவர்களுடன் இணைந்து பயணத்தை தொடருங்கள் வாழ்க்கை நலம் பெறும்
நம்மள பிடுச்சு பேசுறவங்களை விட பிடுச்ச மாதிரி நடிச்சு பேசுறவங்க தான் அதிகம்
கடந்து சென்றவை அனைத்தும் பாதைகள் அல்ல நாம் கற்றுக்கொண்ட பாடங்கள்
நாம் நகர்ந்த இடம் எப்போதுமே வெற்றிடமாகவே இருக்குமாறு சிறப்பாக தரமாக வாழ்ந்துவிட்டு போகணும்
சோகம் துன்பம் இரண்டுமே நம் வாழ்வின் நிலையற்ற கண்ணாடிகளாகும் அவற்றை கடந்து வாழ பழகிக் கொண்டால் அதை விட சிறந்த பாடம் ஏதும் இல்லை
வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயமும் அழகு தான் அவற்றை ரசிக்க கூடிய மனநிலையில் இருந்தாள்
புன்னகை சக்தி வாய்ந்தது நம்மை நேசிப்பவர்களுக்கு மகிழ்ச்சியாய் வெறுப்பவர்களுக்கு தண்டனையாய்
மனிதன் துன்பப்படுவதற்கு முன்பு கல்லாகவும் துயரங்களுக்கு பின்பு மீண்டும் தன்னைத் தானே உருவாக்கிக் கொள்வதில் சிற்பியாகவும் இருக்கிறான் (யதார்த்தம்)
மாறிவிட்டோம் என்பதை விட பல வலிகள் நம்மை மாற்றி விட்டது என்பதே உண்மை
அம்மா என்ற சொல் நமது முதல் மொழி அப்பா என்னும் சொல்லே நமது முதல் முகவரி
வாசம் கொண்ட மலர்கள் பூந்தோட்டத்திற்கு அழகு பாசம் கொண்ட உறவுகள் வாழ்க்கை தோட்டத்திற்கு அழகு
ஒருவரை துன்புறுத்துவது மிகவும் எளிது நம் அன்பை உணரச் செய்வது மிகவும் கடினம்
எதையும் யாரிடமும் எதிர்பார்க்காமல் வெற்றி தோல்வி என்று மனம் சஞ்சலப்படாமல் நடப்பது அனைத்தும் நன்மைக்கே என்று மகிழ்ச்சியுடன் வாழ்வோம் வாழ்க்கை வாழ்வதற்கே
மேலோட்டமாக சிந்திக்கும் போது எல்லாம் சாதாரணமாக தெரியும் செயல்படுத்தும் போது தான் அதில் இருக்கும் சிரமங்கள் புரியும் சரியான திட்டமிட்ட செயல்பாடு மட்டுமே வெற்றியை சேர்க்கும்
ஒரு மென்மையான வார்த்தை ஒரு கனிவான பார்வை ஒரு இதமான புன்னகை இவை அனைத்தும் நிறைந்திருக்கும் உறவு கிடைப்பது வாழ்க்கையில் வரமே
ஒவ்வொரு மனிதனும் ஒரு புதிய புத்தகம் பழகும் பொழுது தான் படிக்க முடியும்
கண்ணீரிலும் உள்ளது உப்பு அதை தவரானவற்கு இடாமல் தகுந்தாற்கு இட்டால் உணவு போல் உறவும் சுவைக்கும்
பேசுபவர்கள் வார்த்தைகளின் வலிமையை உணர்கிறார்கள் பேசாதவர்கள் மௌனத்தின் வலிமையை உணர்த்துகிறார்கள்
சோர்வடைந்து விடாதே வாழ்க்கை நீ எதிர்பாக்காத நேரத்தில் தான் பல ஆச்சரியங்களை கொண்டுவரும்
நலம் விசாரிப்பதோடு வார்த்தைகளை முடித்துக்கொண்டால் உறவுகள் நீடிக்கும்
துன்பம் துன்புற செய்தாலும் சிலர் முகத்திரை அவிழ்த்து காட்டி மீண்டும் யாரையும் நம்பாதே எனும் அறிவுரை வழங்கியே செல்கிறது
கத்துக்க ஆயிரம் விஷயம் இருக்கலாம் ஆனால் அத கத்துக்குற நிலமையில நாம இருக்கனும் அப்படி இல்லைனா வாழ்க்கை நமக்கு நல்லா கத்துக்குடுத்துட்டு போயிரும்
வானிலைய கூட ஓரளவுக்கு அறிய முடியுது சிலரின் மன நிலைய புரிந்துக்கொள்ள முடியிதே இல்ல