நம்மிடம் இருந்து பிரியும் வரை முன்னும் பின்னும் போவோம் வாழ்க்கை எனும் ஆட்டத்தில்
விளையாட தெரிந்த குழந்தையாக இருந்தாலும் வாழ்க்கை ஆட்டம் ரொம்ப கஷ்டம் தான்
இறங்கும் நேரத்தில் கிடைக்கும் ஜன்னலோர சீட் போலத்தான் வாழ்க்கையும் வறுமையை வென்று முடிக்கும் போது இளமைக்காலமும் சேர்ந்தே முடிந்து விடுகிறது
நீ யாருக்கு வேண்டுமானாலும் பொய்யாக நடித்து விடலாம் உன் மனசாட்சியை தவிர உன் மனசாட்சியிடமும் நீ பொய்யாக நடிக்க முயற்சி செய்வாயானால் நஷ்டம் உனக்கு மட்டுமே
தவறுகளை எல்லாம் அழித்து விட்டு வரையும் போது ஓவியம் அழகாகிறது வாழ்க்கையிலும் அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் உறவுகளும் வரமாகிவிடும்
வாழ்க்கையில எந்த சூழ்நிலையிலும் நம்மளைத் தனிமையில் விடாத உறவைச் சம்பாதித்தால் வாழ்கை வரமாகும்
சந்தோஷத்தில் கூட இருந்தவர்களை விட கஷ்டத்தில் தோள் குடுத்தவர்களை என்றும் மறந்து விடாதே
வாழ்க்கை எவ்வளவு கடினமான கவலைகளை கொடுத்தாலும் அதை அனைத்தையும் கடந்து வாழும் மனிதன் அதைவிட வலிமையானவன் ஒவ்வொரு கவலையும் நம்மை திடப்படுத்தி வாழ்க்கையை வெற்றி பெற செய்யவே வைக்கிறது
தனக்கான பாதையை தானே தேடிக் கொள்ளும் தண்ணீராய் இரு நிச்சயம் ஒரு நாள் வெற்றி கிடைக்கும்
மலை ஓங்கி உயர்ந்து காணப்படுகிறது அதுபோலவே மனதில் தோன்றும் எண்ணங்கள் உயர்வானதாக இருந்து விட்டால் துன்பம் இல்லை
விரும்பும் போதெல்லாம் விரும்பியது கிடைத்து விட்டால் விருப்பத்திற்கு என்ன மதிப்பு
போராடி வாழ்வதற்கு வாழ்க்கை ஒன்றும் போர்க்களமல்ல அது பூவனம் போல ரசித்துக் கொண்டே வாழ்வோம்
எதை நாம் மறக்க நினைக்கின்றமோ அது மறக்க முடியாத நினைவுகளாகி விடுகிறது ஏதோ சில தருணங்களில்
உதவி செய்வதில் தவறில்லை பிறரின் தேவைகள எதுவென அறிந்து உதவிடுதல் நலம்
நீங்க எந்த அளவுக்கு நெருங்கி பழகுறிங்களோ அந்த அளவுக்கு ஆபத்து அதிகம் பொதுவா சொன்னேன்
வாழ்க்கை இருக்கும் போதே வாழ்ந்து விடு அடுத்த நொடி என்ன நடக்கும் என்று கூட யாருக்கும் தெரியாது
பிறருடைய குற்றம் காண்பது எளிது தன்னுடைய குற்றம் காண்பது கடிது
இந்த உலகம் உன் முயற்சியை கவனிக்காது முடிவுகளைத் தான் கவனிக்கும் சிந்தித்து செயல்படு
வாழ்க்கை என்பது நீ பார்த்தது போல் இருக்காது ஆனால் நீ நினைத்தப்படி மாற்ற முடியும் நீ முயற்சித்தால் மட்டுமே
வாழ்க்க மிக அழகாகிறது விரும்பும் ஒருவரின் இதயத்தில் இடம் பிடிக்கும் போது
இதுதான் வாழ்க்கையானு சலித்து கொள்ளாமல் இதுவும் வாழ்க்கைதானு கடந்துவிடுங்கள்
நாம் உணர்ந்து விரும்பி செய்யும் காரிங்கள் மட்டுமே நம் வாழ்க்கையை அழகுபடுத்தும்
நம் வாழ்க்கையின் சந்தோஷம் நம் மனதில் இருக்கிறது உன் மனது அடுத்தவர்களை நம்பி இருந்தால் உனக்கு சந்தோஷம் இருக்காது
வாழ்க்கையில் எதையும் தேடும் பொழுது பொறுமையுடன் தேடுங்கள் பொறாமையோடு தேடாதீர்கள்
நடப்பவை அனைத்தும் நல்லதாக இல்லை என்றாலும் நல்லது மட்டுமே நடக்க வேண்டும் என்று நம்புவோம்