எங்கள் ஆத்துக்காரனும் கச்சேரிக்குப்போய் வந்தான்.
ஜாண் பண்டாரத்துக்கு முழம் விபூதி/தாடி
மடப் பெருமைதான் நீச்சு தண்ணீருக்கு வழியில்லை.
வீடு வெறும் வீடு, வேலூர் அதிகாரம்.
பல்லக்குக்கு மேல்மூடி யில்லாதவனுக்கும், காலுக்குச் செருப்பில்லாதவனுக்கும் விசாரம் ஒன்றே.
கூழ் குடித்தாலும் குட்டாய்க் குடிக்கவேண்டும்.
பசி வந்தால் பத்தும் பறக்கும்.
வௌவால் வீட்டுக்கு வௌவால் வந்தால், நீயும் தொங்கு நானும் தொங்கு.
உலுத்தன் விருந்துக்கு ஒப்பானது ஒன்றுமில்லை.
ஆனால் அச்சிலே வார், ஆகாவிட்டால் மிடாவிலே வார்.
இராஜ முகத்துக்கு எலுமிச்சம்பழம்.
நீண்டது தச்சன், குறைந்தது கருமான்.
மழைக்கால இருட்டானாலும், மந்தி கொம்பு இழந்து பாயுமா?
கெரடி கற்றவன் இடறிவிழுந்தால், அதுவும் ஒரு வரிசை என்பான்.
சட்டி சுட்டதும், கை விட்டதும்.
பார்க்கக்கொடுத்த பணத்துக்கு வெள்ளிக்கிழமையா?
ரெட்டியாரே ரெட்டியாரே என்றால், கலப்பையை பளிச்சென்று போட்டதுபோல்.
இது சொத்தை, அது புளியங்காய்ப்போல்.
இந்தப் பூராயத்துக்கு ஒன்றும் குறைச்சலில்லை.
ஈர வெங்காயத்திற்கு இருபத்து நாலு புரை எடுக்கிறது.
ஊசி கொள்ளப்போய்த் துலாக் கணக்கு பார்த்ததுபோல.
எச்சில் (இலை) எடுக்கச் சொன்னார்களா? எத்தனை பேர் என்று எண்ணச் சொன்னார்களா?
குதிரை நல்லதுதான், சுழி கெட்டது.
புண்ணியத்துக்கு உழுத குண்டையை பல்லைப் பிடித்துப் பதம் பார்த்ததுபோல.