ஊர் இளக்காரம் வண்ணானுக்குத் தெரியும்.
அண்ணாமலையாருக்கு அறுபத்துநாலு பூசை, ஆண்டிகளுக்கு எழுபத்துநாலு பூசை.
அதிகாரி வீட்டுக் கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்.
வாத்தியாரை மெச்சின பிள்ளை இல்லை.
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி?
ஒருகூடை கல்லும் தெய்வமானால் கும்பிடுகிறது எந்தக் கல்லை?
ஈரைப் பேனாக்கிப் பேனைப் பெருமாள் ஆக்குகிறான்.
கரும்பை விரும்ப விரும்ப வேம்பு.
வைத்தியன் பிள்ளை நோவு தீராது, வாத்தியார் பிள்ளைக்குப் படிப்பு வராது.
இத்தனை அத்தனையானால் அத்தனை எத்தனையாகும்?
இடைச்சன் பிள்ளைக்காரிக்குத் தலைச்சன் பிள்ளைக்காரி மருத்துவம் பார்த்தாற்போல.
தொட்டுக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது.
நேற்று வெட்டின கிணற்றிலே முந்தாநாள் வந்த முதலை போல.
புதிய வண்ணானும் பழைய அம்பட்டனும் தேடு.
அப்பியாசம் கூசா வித்தை.
எத்தனை வித்தை கற்றாலும் செத்தவனைப் பிழைப்பிக்க அறியான்.
பங்காளத்து நாய் சிங்காசனம்மேல் ஏறினது என்று வண்ணான் கழுதை வெள்ளாவிப் பானையில் ஏறினதாம்.
அம்பாத்தூர் வேளாண்மை யானை கட்டத் தாள், வானமுட்டும் போர்; ஆறுகொண்டது பாதி, தூறுகொண்டது பாதி.
உற்றார் தின்றால் புற்றாய் விளையும், ஊரார் தின்றால் பேராய் விளையும்.
வாழைப்பழம் கொண்டுபோனவள் வாசலில் இருந்தாள், வாயைக் கொண்டுபோனவள் நடுவீட்டில் இருந்தாள்.
ஆகாசத்தை வடுப்படாமல் கடிப்பேன் என்கிறான்.
துள்ளாதே துள்ளாதே குள்ளா! பக்கத்தில் பள்ளமடா!
பொரிமாவை மெச்சினான் பொக்கைவாயன்.
ஆண்டிக்குக் கொடுக்கிறாயோ, சுரைக் குடுக்கைக்குக் கொடுக்கிறாயோ?
சங்கிலே விட்டால் தீர்த்தம், மொந்தையிலே விட்டால் தண்ணீர்.