Tamil Proverbs (தமிழ் பழமொழிகள்)

கிழவியும் காதம், குதிரையும் காதம்.
விளக்கம்: கிழவி தன் காததூரப் பயணத்தை முடித்தபோது, குதிரையும் அப்பயணத்தை முடித்தது.

Posted by: TamilPedia
குதிரை குணம் அறிந்து அல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை!
விளக்கம்: குதிரையின் மனம் தெரிந்துதான் ஆண்டவன் அதைக் கொம்புள்ள மிருகமாகப் படைக்கவில்லை.

Posted by: TamilPedia
சுவாமி இல்லையென்றால் சாணியை பார்; மருந்தில்லை என்றால் பாணத்தைப் பார்; பேதி இல்லை என்றால் (நேர்) வானத்தைப் பார்.
விளக்கம்: கடவுள் இல்லை என்பவன் சாணியைப் பார்த்தால் தெரிந்துகொள்ளட்டும்; மருந்து இல்லை என்பவன் வாணவேடிக்கைகளைப் பார்க்கட்டும்; மலம் சரியாக இறங்காதவன் பேயாமணக்கு விதைகளைத் தேடட்டும்.


Posted by: TamilPedia
தெய்வம் காட்டும், ஊட்டுமா?
விளக்கம்: தெய்வம் வழிகாட்டும், ஆனால் அந்த வழியில் நாம் தானே போகவேண்டும்? தெய்வமே என்கையைப் பிடித்துக்கூட்டிச் செல்லவேண்டுமென்றால் எப்படி?


Posted by: TamilPedia
இல்லது வாராது, உள்ளது போகாது.
விளக்கம்: நீ செய்யாத வினைகள் உன்னை அண்டாது, நீ செய்த வினைகள் அதன் விளைவுகளை அனுபவிக்கும்வரை நீங்காது.


Posted by: TamilPedia
தன்வினை தன்னைச்சுடும், ஓட்டப்பம் வீட்டைச்சுடும்.
விளக்கம்: ஒவ்வொருவருடைய வினைகளும் அவரை நிச்சயம் பாதிக்கும், ஓடுமேல் உள்ள அப்பத்தால் வீடு பற்றி எறிவதுபோல.

Posted by: TamilPedia
சீதை பிறக்க இலங்கை அழிய.
விளக்கம்: சீதாதேவியின் பிறப்பால் இலங்கை அழிந்தது.

Posted by: TamilPedia
காரண குரு, காரிய குரு.
விளக்கம்: காரண குரு ஆத்மனை அறிவுறுத்தி மோக்ஷத்துக்கு வழி சொல்பவர். காரிய குரு நானாவிதக் கர்மங்களையும் தர்மங்களையும் போதித்து வழிநடத்தி சுவர்கத்துக்கு வழிகாட்டுபவர்.

Posted by: TamilPedia
குப்பையும் கோழியும் போல குருவும் சீஷனும்.
விளக்கம்: கோழி குப்பையைக் கிளறித் தான் உண்ணுவதைத் தேடுவதுபோல, சீடன் குருவிடம் விசாரணை மூலம் தன் உண்மையை அறிந்துகொள்ளவேண்டும்.

Posted by: TamilPedia
சாஸ்திரம் பொய் என்றால் கிரகணத்தை பார்.
விளக்கம்: சாத்திரங்கள் பொய்யென்று நீ கருதினால், கிரகணத்தைக் கவனி.

Posted by: TamilPedia
அற்றது பற்றெனில் உற்றது வீடு.
விளக்கம்: உலகப்பொருட்களில் உள்ள பற்று நீங்கினால் மோட்சம் சம்பவிக்கும்/புலப்படும்/உறுதிப்படும்.

Posted by: TamilPedia
இமைக்குற்றம் கண்ணுக்குத்தெரியாது.
விளக்கம்: இமையின் குறைபாடுகளை அதன் கீழேயே உள்ள கண்ணால் பார்க்கமுடியாது.

Posted by: TamilPedia
அம்மி மிடுக்கோ, அரைப்பவள் மிடுக்கோ?
விளக்கம்: அம்மியில் அரைப்பதன் ஆற்றல் அம்மிக்கல்-குழவியில் உள்ளதா, அரைக்கும் பெண்ணின் வலிமையில் உள்ளதா?

Posted by: TamilPedia
இழவு சொன்னவன் பேரிலேயா பழி?
விளக்கம்: மரணத்தை அறிவிப்பவனைக் குறைசொல்வது தகுமா?

Posted by: TamilPedia
சித்திரத்துக் கொக்கே, ரத்தினத்தைக் கக்கு!
விளக்கம்: எவ்வளவுதான் தத்ரூபமாக இருந்தாலும் சித்திரமாக வரையப்பட்ட கொக்கினைத் திருடுபோன ரத்தினத்துக்காகக் குற்றம்சாட்ட முடியுமா?

Posted by: TamilPedia
மாமியார் துணி அவிழ்ந்தால் வாயாலும் சொல்லக்கூடாது, கையாலும் காட்டக்கூடாது.
விளக்கம்: மாமியாரப் பொறுத்தவரை மருமகள் எது சொன்னாலும், செய்தாலும் குற்றம்.

Posted by: TamilPedia
தூர்த்த கிணற்றைத் தூர்வாராதே.
விளக்கம்: கிணற்றைத் தூர்த்து முடிவிட்டபின், மீண்டும் அதைத் தோண்டித் தூர்வாரினால் பயன் உண்டோ?

Posted by: TamilPedia
உருட்டப்புரட்ட உள்ளதும் உள்ளுக்கு வாங்கும்.
விளக்கம்: ஒருவனது வஞ்சகச் செயல்களால் அவனுக்குள் இருக்கும் உண்மை ஒடுங்கிவிடும்.

Posted by: TamilPedia
இது என் குலாசாரம், இது என் வயிற்றாசாரம்.
விளக்கம்: இது என் குலத்தின் கட்டுப்பாடு, இது என் வயிற்றின் கட்டுப்பாடு.

Posted by: TamilPedia
கண்டால் காமாச்சி நாயகர், காணாவிட்டால் காமாட்டி நாயகர்.
விளக்கம்: ஒருவனைக் கண்டபோது அவன மரியாதைக்கு உரியவனாகவும், காணாதபோது அவன் மடையன் என்றும் சொல்வது.

Posted by: TamilPedia
அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப்பெண்ணும் சமைக்கும்.
விளக்கம்: ஐந்து சமையல் பொருள்களும் மூன்று சமையல் தேவைகளும் அருகில் இருந்தால் ஒன்றும் அறியாத சிறுபெண்கூட எளிதில் சமைத்துவிடுவாள்.

Posted by: TamilPedia
குரங்கு கள்ளும் குடித்து, பேயும் பிடித்து, தேளும் கொட்டினால், என்ன கதி ஆகும்?
விளக்கம்: குரங்கு என்பது ஒரு நிலையில் நில்லாது மனம் போனபோக்கில் ஆடும் விலங்கு. அது கள்ளும் குடித்து, பின் அதற்குப் பேய் பிடித்து, அதன்பின் அதனைத் தேளும் கொட்டிவிட்டால், குரங்கின் கதி என்ன?

Posted by: TamilPedia
வீணாய் உடைந்த சட்டி வேண்டியது உண்டு, பூணாரம் என் தலையில் பூண்ட புதுமையை நான் கண்டதில்லை.
விளக்கம்: எவ்வளவோ பானைகள் (என் தலையில்) உடைந்து வீணானதைப் பார்த்துவிட்டேன், ஆனால் தலையில் உடைந்த பானை கழுத்தில் ஆரமாக விழுந்த புதுமையை இன்றுதான் கண்டேன்.

Posted by: TamilPedia
ஊரார்வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே.
விளக்கம்: தன் பொருளைவிட மற்றவர் பொருளை உபயோகிப்பதில் தாராளம்.

Posted by: TamilPedia
கஞ்சி வரதப்பா என்றால் எங்கே வரதப்பா என்கிறான்.
விளக்கம்: இவன் தான் வணங்கும் காஞ்சீபுர வரதராஜப் பெருமாளைக்குறித்துச் சொன்னது அங்கிருந்த பிச்சைக்காரன் காதில் அவன் குடிக்கும் கஞ்சி ஊற்றுபவர்கள் வருவவதுபோல் விழுந்தது.

Posted by: TamilPedia

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...