கிழவியும் காதம், குதிரையும் காதம்.
குதிரை குணம் அறிந்து அல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை!
சுவாமி இல்லையென்றால் சாணியை பார்; மருந்தில்லை என்றால் பாணத்தைப் பார்; பேதி இல்லை என்றால் (நேர்) வானத்தைப் பார்.
தெய்வம் காட்டும், ஊட்டுமா?
இல்லது வாராது, உள்ளது போகாது.
தன்வினை தன்னைச்சுடும், ஓட்டப்பம் வீட்டைச்சுடும்.
காரண குரு, காரிய குரு.
குப்பையும் கோழியும் போல குருவும் சீஷனும்.
சாஸ்திரம் பொய் என்றால் கிரகணத்தை பார்.
அற்றது பற்றெனில் உற்றது வீடு.
இமைக்குற்றம் கண்ணுக்குத்தெரியாது.
அம்மி மிடுக்கோ, அரைப்பவள் மிடுக்கோ?
இழவு சொன்னவன் பேரிலேயா பழி?
சித்திரத்துக் கொக்கே, ரத்தினத்தைக் கக்கு!
மாமியார் துணி அவிழ்ந்தால் வாயாலும் சொல்லக்கூடாது, கையாலும் காட்டக்கூடாது.
தூர்த்த கிணற்றைத் தூர்வாராதே.
உருட்டப்புரட்ட உள்ளதும் உள்ளுக்கு வாங்கும்.
இது என் குலாசாரம், இது என் வயிற்றாசாரம்.
கண்டால் காமாச்சி நாயகர், காணாவிட்டால் காமாட்டி நாயகர்.
அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப்பெண்ணும் சமைக்கும்.
குரங்கு கள்ளும் குடித்து, பேயும் பிடித்து, தேளும் கொட்டினால், என்ன கதி ஆகும்?
வீணாய் உடைந்த சட்டி வேண்டியது உண்டு, பூணாரம் என் தலையில் பூண்ட புதுமையை நான் கண்டதில்லை.
ஊரார்வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே.
கஞ்சி வரதப்பா என்றால் எங்கே வரதப்பா என்கிறான்.