காற்று வீசும் திசை பார்த்து
அலைகள் அசைந்தாலும்
கடலை விட்டு அலை பிரிவதில்லை..
உயிராக நேசித்த அன்பு மட்டும்
பிரியும் என்பது சாத்தியமா??
மேகங்களை விட்டுச் செல்லும்
வெண்ணிலவு ஒருபோதும்
விண்ணை விட்டுச் செல்வதில்லை..
இதயத்தின் உள்ளே இருக்கும்
நினைவுகள் என்றும் என்னை
விட்டு நீங்குவதில்லை..
என்னை
வெறுக்கும் அளவுக்கு
அதிகமான அன்பினை
வெளிப்படுத்தியதே
என் வெறுப்பின் ரகசியமோ..
யாருக்கும்
அடங்காத என்னை
உன் அன்பால்
அடக்கி விட்டாய்
இருந்தும் காரணம்
தேடுகிறேன்..
உன்னை வெறுக்க
ஆயிரம் காரணம்
கண்டு பிடித்து
சண்டை போட்டாலும்
மனம் என்னவோ
விரும்பத்தான்
செய்கிறது..
தூக்கத்தை தொலைத்து நெடுநாட்கள் ஆகிப்போனது.. நினைவெல்லாம் நீயாகிப் போனதால் என்னவளே.!
அன்பின் வெளிப்பாடு அதிகம் காட்டியதால் அநாதையாக நிற்கிறேன்.. பாசம் வைத்ததன் விளைவு சோகத்தை பகிர்ந்து கொள்ள யாருமின்றி தனிமையில் வாடுகிறேன்.!!
என் தனிமை தீயில் நான் கருகும் வேளையிலும் உன் நினைவுகள் ஒளி வீசுகிறது.!!
என் இதய துடிப்பு நிற்கும் வரை உன் நினைவுகள் துடித்துக் கொண்டேதான் இருக்கும்.!!
சில வலிகளும் பிரிவுகளும் இதயத்தை ஆள நினைக்கும் போது தனிமையை தேடி கால்கள் தானாக நடக்கிறது..!!!
பிரிந்தே இருந்தாலும் மறக்கவும் முடியவில்லை மறுக்கவும் முடியவில்லை உன் நினைவுகளை.!
என் தனிமை தீயில் நிரந்தரமாக குளிர் காய்கிறேன்.. நீயோ கல்லெறிந்து கலைக்கிறாய்.. காயப்பட்டாலும் கண்ணீர் சிந்த வழியில்லை.!!
கண்ணீர் கூட வற்றி போனதடி உன்னை நினைத்து அழும் வேளையில் கடன் வாங்க காத்திருக்கிறேன் என் கனவுகளையாவது திருப்பி கொடுத்து விட்டு போ..!!
காதல் காலங்கள் மாறிடும்.. காதல் கனவுகள் கலைந்திடும்.. காதல் வலிகள் ஒருபோதும் மறவாது அழியாது.!!!
உன்னை சந்திக்கும் வரை உண்மையிலே என் இதயம் இத்தனை சுமைகளை தாங்கும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.. நீ வந்து சென்ற பிறகே என் இதயத்தை மதிப்பீடு செய்தேன்.!
உன்னோடு பேச ஆயிரம் ஆசைகள் எனக்கும் இருந்தது.. நீ தான் என்னை தொந்தரவாக நினைத்தாய்.. அதனால் தான் தொடர்வதை நிறுத்திக்கொண்டேன்.!
மனம் வலிக்கின்றது என்று தான் உன்னிடம் பேச நினைத்தேன்.. ஆனால் நீயே ஒதுங்கி செல்வாய் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை அன்பே.!!
பிரிவின் வலி தெரியுமோ உனக்கு.. என்னவளே என்னைப்போல் நீயும் என்னை காதலித்து இருந்தால் தெரியும் பிரிவின் வலி என்னவென்று உனக்கு.!!
உன்னை நினைத்ததை தவிர வேறு எந்த தவறும் எந்தன் இதயம் செய்யவில்லை.. இருந்தும் அதை ஏன் இப்படி வதைக்கிறாய்.!
என் தள்ளாடும் மனதிற்குள்ளே உன் நிழலாடும் நினைவுகள் தான்.. என் தனிமையின் தாகத்திற்கு தண்ணீராய் இருக்கின்றது.!!
உயிர் என்றாவது ஒருநாள் என்னை விட்டு போய் விடும்.. உன் நினைவுகள் என்னை விட்டு போகாது.!
திடீரென சிலரின் நியாபகம் வரும்போது கண்களுக்கு நடிக்க தெரியவில்லை.!
களவாட கற்றுத் தந்தாய் காயத்திற்கு மட்டும் மருந்து சொல்லாமல் மறந்து போவது நியாயமா???
- 1
- 2