காயப்படுத்திய உறவுகளை
கடந்து போகும் சூழல் வந்தால்
சிரித்துக்கொண்டே
கடந்து செல்லுங்கள்..
கன்னத்தில் அறைவதை விட
அதிகம் வலிக்கட்டும்.
சின்ன சின்ன மாற்றங்கள்
நம் வாழ்க்கையை திசையறியாமல்
திருப்பி போட்டு விடுகிறது..
அதிலும் பிடித்த உறவுகளின் மாற்றம்
நம்மை மிகப்பெரிய
ஏமாற்றத்தில் தள்ளுகிறது.!
உறவுகளை தேடுவதை
அடியோடு நிறுத்தி விட்டேன்..
உள்ளம் சொல்கிறது
சோகங்கள் போதுமென்று.!
மரணத்தை விட கொடூரமானது..
நாம் நேசிப்பவர்
நம்மை வெறுப்பதும் மறப்பதும்..!
உணர்வுகளற்ற உறவுகளிடம்
உறவு கொண்டாடுவதை விட
உதறி செல்வது சிறப்பு.
தேவையில்லாத ஒன்றுக்கும்
தேவையில்லாதவர்களுக்கும்
முக்கியத்துவம் எப்போது கொடுகின்றமோ..
அப்போதே வலியும் வேதனைகளுக்கும்
நாமே வழியை ஏற்படுத்திக் கொள்கிறோம்.!
உண்மையை சொன்னால்
கசப்பாக தான் இருக்கும் என்று
சொல்லாமல் மறைப்பதால்
நாம் பொய்யானவர்களாக
மாறிவிடுகிறோம்.
வாழ்வின் முன்னேறி உயரச் செல்லுங்கள்..
தேவையென்றால் மட்டுமே கீழிறங்குங்கள்..
சிலருக்கு தேவைப்படும்போது
நாம் தேடப்படுவோம்
அதுவரை உயரவே இருப்போம்.
பொய்யான உறவுகளிடம்
உண்மையான அன்பை கொடுத்து
ஏமாந்தவர்கள்
உண்மையான அன்பு கிடைத்தால் கூட
அதை ஏற்றுக் கொள்வதற்கு தயங்குவார்கள்..
ஏனென்றால் அவர்கள்
கடந்து வந்த பாதையில்
அனுபவித்த வலிகள் ஏராளம்.!