ஆயிரம் உறவுகள் உன்னை சூழ்ந்து நின்றாலும் உனக்கு ஒரு துன்பம் வரும் போது வாழ் நாள் முழுவதும் உன்னை தாங்கிப் பிடிக்கும் ஒரு உறவு உன் தாய் மட்டும் தான்.
இந்த உலகில் அளவிட முடியாத ஒன்று உள்ளது என்றால் அது தாயின் பாசம் மட்டும் தான்.
எந்த பெரிய வலியை கூட தாங்கிக் கொள்ளும் தாயால் பிள்ளைகளுக்கு ஏற்படும் சிறு வலிகளைக் கூட தாங்கிக் கொள்ள முடிவதில்லை.
என்னிடம் சிலர் காற்றின் காற்றின் மடியில் இளைப்பாறினால் சுகமாக இருக்கும் என்கிறார்கள். நான் மனதிற்குள் மௌனமாக சொல்லிக் கொண்டேன். தாயின் மடி தெரியாதவர்கள் என்று.
தெய்வத்தை காண நீண்ட நேரம் கோவிலில் வரிசையில் நிற்க தேவை இல்லை தாய் நிற்கும் இடத்தில் தாய் முன்னால் நின்றால் போதும்.
தாய் என்ற ஒரு சக்திக்கு முன்னால் உலகில் வேறு எந்த சக்திகளாலும் எதிர்த்து நிற்க முடியாது.
வலி கொடுத்து பிறந்தாலும் பிள்ளைக்கு ஒரு வலி என்றால் துடிக்கிறது தாயின் தூய்மையான இதயம்.
நீ என்னில் கோபம் கொண்டு திட்டும் வார்த்தைகள் கூட நான் ரசிக்கும் கவிதை தாய்
நான் இந்த உலகிற்கு வரும் முன்னரே நான் கேட்டு ரசித்த அழகான இசை அம்மாவின் இதய துடிப்பு மட்டுமே.
வாழ்வு முழுவதும் எனக்கு அன்பு கொடுக்கும் ஒருத்தி, தன் வாழக்கையை எனக்காக அர்ப்பணித்த ஒருத்தி, துன்பத்திலும் சரி இன்பத்திலும் சரி என்னுடனே இருக்கும் ஒருத்தி, அப்போது விழுந்து நடந்தாலும் சரி இப்போது நிமிர்ந்து நடந்தாலும் சரி என்னை தாங்கும் ஒருத்தி, மெழுகுவர்த்தி போல தன்னை உருக்கி எனக்கு ஒளி கொடுக்கும் ஒருத்தி, உடல் உயிர் கொடுத்து இந்த உலகிற்கு என்னை படைத்த ஒருத்தி, நான் விழுந்து விட்ட நிலைகளில் நீ விழுந்து என்னை தூக்கி விட்டாய், விலைமதிப்புள்ள அனைத்தையும் எனக்கு கொடுத்தாய் அதனால் தான் கடவுள் விலைமதிக்க முடியாத பொக்கிஷமாக உன்னை எனக்கு தாயாக கொடுத்துள்ளான்.
நீ வலி பொறுத்து என்னை நீ இந்த உலகிற்கு கொண்டு வந்தாய் அதனால் தான் எனக்கு வலிக்கும் போதெல்லாம் உன்னையே அழைக்கிறேன் அம்மா என்று.
உலகில் உள்ள உறவுகளில் ஒரு புனிதமான உறவு அம்மா. அதற்கு ஈடு இணை எதுவுமே இல்லை.
தாயின் அன்பிற்கு நிகரான உண்மையான பாசம் இந்த உலகில் இல்லை.
உன்னை அணைத்து பிடிக்கும் போதெல்லாம் உணர்கிறேன் உலகம் என் கையில் என்று
இந்த நேரத்திலும் தன்னை பற்றி கவலைகொள்ளாமல் நமது ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளும் அந்த உணர்வு பாசம் தான் தாய்மை
தாய் மடியைக் காட்டிலும் ஒரு சிறந்த தலையணை இந்த உலகில் வேறெதுவும் இல்லை
ஆயிரம் உறவுகள் உன் மீது அன்பாக இருந்தாலும் அன்னையின் அன்புக்கும் அவள் அரவணைப்பிற்கும் எதுவும் ஈடாகாது
உலகின் நிகழ்வுகளையும் அழகினையும் எடுத்து கூறும் முதல் குருவாக இருப்பவர் அம்மா மட்டுமே
ஆயிரம் உணவுகள் வித விதமாக சாப்பிட்டாலும் அன்னை சமைத்த உணவுக்கு ஈடாகாது
ஒவ்வொரு நாளும் கவலை படுவாள் ஆனால் ஒரு நாளும் தன்னை பற்றி கவலை பட மாட்டாள்
கடல் நீரை கடன் வாங்கி கண்கொண்டு அழுதாலும் நான் சொல்லும் நன்றிக்கு போதாதம்மா அன்னையர் தின வாழ்த்துக்கள்
உயிருக்குள் அடைக்காத்து உதிரத்தை பாலாக்கி பாசத்தில் தாலாட்டி பல இரவுகள் தூக்கத்தை தொலைத்து நமக்காகவே வாழும் அன்பு தெய்வம் அன்னை
எதுவும் அறியா புரியா வயதில் எந்த சுமைகளும் கவலைகளுமின்றி அன்னையின் கரங்களில் தவழும் காலம் சொர்க்கமே
நான் உன்னுடன் இருக்கும் பொழுது என் பிரச்சனை எப்போதும் மறந்து விடுகிறேன் செல்லமே
- 1
- 2