
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்
Theraan Thelivum Thelindhaankan Aiyuravum
Theeraa Itumpai Tharum
குறள் எண்: | 510 | |
---|---|---|
குறளின் பால்: | பொருட்பால் | |
அதிகாரம் : | தெரிந்து தெளிதல் | |
குறளின் இயல்: | அரசியல் |
குறளின் விளக்கம்
மு.வரதராசன் விளக்கம்:
ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காதத் துன்பத்தைக் கொடுக்கும்.சாலமன் பாப்பையா விளக்கம்:
ஒருவனை ஆராயாமல் பதவியில் அமர்த்துவதும், அமர்த்தியபின் அவன்மீதே சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பத்தைத் தரும்.கலைஞர் விளக்கம்:
ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்து ஏற்றுக் கொள்வதும், ஆராய்ந்து தேர்வு செய்து ஏற்றுக்கொண்டபின் அவரைக் சந்தேகப்படுவதும் தீராத துன்பத்தைத் தரும்மணக்குடவர் விளக்கம்:
ஒருவனை ஆராயாது தெளிதலும் தெளிந்து கொள்ளப்பட்டவன் மாட்டுத் தான் ஐயப்படுதலுமாகிய இவ்விரண்டும் நீங்காத துன்பத்தைத் தரும்.வீ. முனிசாமி விளக்கம்:
பரிமேலழகர் விளக்கம்:
தேரான் தெளிவும் - அரசன் ஒருவனை ஆராயாது தெளிதலும், தெளிந்தான்கண் ஐயுறவும் - ஆராய்ந்து தெளிந்தவன் மாட்டு ஐயப்படுதலும், இவ்விரண்டும், தீராஇடும்பை தரும் - அவனுக்கு நீங்காத துன்பத்தைக் கொடுக்கும். (வினை வைத்த பின் ஒரு தவறு காணாது வைத்து ஐயுறுமாயின், அதனை அவன் அறிந்து, 'இனி இது நில்லாது' என்னும் கருத்தான் அவ்வினையை நெகிழ்த்துவிடும், அதுவேயன்றிப் பகைவரால் எளிதில் பிரிக்கவும் படும். ஆதலால் தெளிந்தான்கண் ஐயுறவும் ஆகாதாயிற்று. தெளிவிற்கு எல்லை கூறியவாறு. இவை ஐந்து பாட்டானும், தெளியப்படாதார் இவர் என்பதூஉம், அவரைத் தெளிந்தால் படும் இழுக்கும், தெளிவிற்கு எல்லையும் கூறப்பட்டன.).
English Translation:
Trust without test, The trusted doubt, Both entail troubles in and out
Trust without test, The trusted doubt, Both entail troubles in and out
English Explanation:
To make choice of one who has not been examined, and to entertain doubts respecting one who has been chosen, will produce irremediable sorrow
To make choice of one who has not been examined, and to entertain doubts respecting one who has been chosen, will produce irremediable sorrow
English Couplet:
Trust where you have not tried, doubt of a friend to feel,Once trusted, wounds inflict that nought can heal
Trust where you have not tried, doubt of a friend to feel,Once trusted, wounds inflict that nought can heal
Paul Name: Wealth (Porutpaal),
Iyal Name: Royalty (Arasiyal),
Adikaram: Selection and Confidence (Therindhudhelidhal)
Iyal Name: Royalty (Arasiyal),
Adikaram: Selection and Confidence (Therindhudhelidhal)