
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்
Thaanam Thavamirantum Thangaa Viyanulakam
Vaanam Vazhangaa Thenin
குறள் எண்: | 19 | |
---|---|---|
குறளின் பால்: | அறத்துப்பால் | |
அதிகாரம் : | வான்சிறப்பு | |
குறளின் இயல்: | பாயிரவியல் |
குறளின் விளக்கம்
மு.வரதராசன் விளக்கம்:
மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்சாலமன் பாப்பையா விளக்கம்:
மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது, தன்னை உயர்த்தும் தவமும் இராதுகலைஞர் விளக்கம்:
இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்மணக்குடவர் விளக்கம்:
தானமும் தவமுமாகிய விரண்டறமு முளவாகா, அகன்ற வுலகத்துக்கண் மழை பெய்யாதாயின். இது தானமும் தவமுங் கெடுமென்றது.வீ. முனிசாமி விளக்கம்:
மழை பெய்யாவிட்டால் அகன்ற இவ்வுலகில் தானம் செய்வதும் தவம் செய்வதும் ஆகிய இரண்டு அறங்களும் நடைபெறா.பரிமேலழகர் விளக்கம்:
வியன் உலகம் தானம் தவம் இரண்டும் தங்கா - அகன்ற உலகின்கண் தானமும் தவமும் ஆகிய இரண்டு அறமும் உளவாகா, வானம் வழங்காது எனின் - மழை பெய்யாது ஆயின். (தானமாவது அறநெறியான் வந்த பொருள்களைத் தக்கார்க்கு உவகையோடும் கொடுத்தல், தவம் ஆவது மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கல் முதலாயின. பெரும்பான்மை பற்றித் தானம் இல்லறத்தின் மேலும், தவம் துறவறத்தின் மேலும் நின்றன.).
English Translation:
Were heaven above to fail below Nor alms nor penance earth would show
Were heaven above to fail below Nor alms nor penance earth would show
English Explanation:
If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious world
If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious world
English Couplet:
If heaven its watery treasures ceases to dispense,Through the wide world cease gifts, and deeds of penitence
If heaven its watery treasures ceases to dispense,Through the wide world cease gifts, and deeds of penitence
Paul Name: Virtue (Araththuppaal),
Iyal Name: Prologue (Paayiraviyal),
Adikaram: The Blessing of Rain (Vaansirappu)
Iyal Name: Prologue (Paayiraviyal),
Adikaram: The Blessing of Rain (Vaansirappu)