
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
Sirappotu Poosanai Sellaadhu Vaanam
Varakkumel Vaanorkkum Eentu
குறள் எண்: | 18 | |
---|---|---|
குறளின் பால்: | அறத்துப்பால் | |
அதிகாரம் : | வான்சிறப்பு | |
குறளின் இயல்: | பாயிரவியல் |
குறளின் விளக்கம்
மு.வரதராசன் விளக்கம்:
மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது, நாள் வழிபாடும் நடைபெறாதுசாலமன் பாப்பையா விளக்கம்:
மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது, ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாதுகலைஞர் விளக்கம்:
வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?மணக்குடவர் விளக்கம்:
சிறப்புச் செய்யப்படுகின்ற விழவு பூசனை நடவாது, வானம் புலருமாகில் தேவர்களுக்கும் இவ்வுலகின்கண். மழைபெய்யாக்கால் வருங் குற்றங் கூறுவார் முற்பட நான்குவகைப்பட்ட அறங்களில் பூசை கெடுமென்றார்.வீ. முனிசாமி விளக்கம்:
மழை பெய்யாவிட்டால் வானவர்களுக்கும் இவ்வுலகில் நடைபெறுகின்ற சிறப்பான திருவிழாவோடு கூடிய பூசையும் நடக்காது.பரிமேலழகர் விளக்கம்:
வானோர்க்கும் ஈண்டுச் சிறப்போடு பூசனை செல்லாது - தேவர்கட்கும் இவ்வுலகில் மக்களால் செய்யப்படும் விழவும் பூசையும் நடவாது, வானம் வறக்குமேல் - மழை பெய்யாதாயின் (நைமித்திகத்தோடு கூடிய நித்தியம் என்றார் ஆகலின் செல்லாது என்றார். உம்மை சிறப்பு உம்மை. நித்தியத்தில் தாழ்வு தீரச் செய்வது நைமித்திகம் ஆதலின், அதனை முற்கூறினார்.)
English Translation:
The earth, beneath a barren sky, Would offerings for the gods deny
The earth, beneath a barren sky, Would offerings for the gods deny
English Explanation:
If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the celestials
If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the celestials
English Couplet:
If heaven grow dry, with feast and offering never more,Will men on earth the heavenly ones adore
If heaven grow dry, with feast and offering never more,Will men on earth the heavenly ones adore
Paul Name: Virtue (Araththuppaal),
Iyal Name: Prologue (Paayiraviyal),
Adikaram: The Blessing of Rain (Vaansirappu)
Iyal Name: Prologue (Paayiraviyal),
Adikaram: The Blessing of Rain (Vaansirappu)