
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து
Oppuravi Naalvarum Ketenin Aqdhoruvan
Vitrukkol Thakka Thutaiththu
குறள் எண்: | 220 | |
---|---|---|
குறளின் பால்: | அறத்துப்பால் | |
அதிகாரம் : | ஒப்புரவறிதல் | |
குறளின் இயல்: | இல்லறவியல் |
குறளின் விளக்கம்
மு.வரதராசன் விளக்கம்:
ஒப்புரவால் கேடு வரும் என்றால் அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும் தகுதி உடையதாகும்.சாலமன் பாப்பையா விளக்கம்:
இருப்பதைப் பிறர்க்குக் கொடுத்துவிட்டால், நாளை நமக்குத் தீமை வருமே என்று சொன்னால், தன்னையே விலையாகக் கொடுத்து அந்தத் தீமை வாங்கத்தக்கதே.கலைஞர் விளக்கம்:
பிறருக்கு உதவுகின்ற சிறப்புடைய உலக ஒழுக்கம், கேடு விளைவிக்கக் கூடியதாக இருப்பின், அக்கேடு, ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும்மணக்குடவர் விளக்கம்:
ஒருவன் ஒப்புரவு செய்தலினாலே பொருட்கேடு வருமென்று சொல்லின், அக்கேட்டைக் கேடாகச் சேர்த்துக் கொள்ளல் கூடாது. அஃது ஒன்றை விற்று ஒன்றைக் கொள்ளுகின்ற வாணிகமாகக் கொள்ளுந் தகுதியுடைத்து. கெட்டானாயினும் அதனை ஆக்கமாகக் கொள்ளல் தகும்: பிற்பயப்பன நன்மையாதலான்.வீ. முனிசாமி விளக்கம்:
பரிமேலழகர் விளக்கம்:
ஒப்புரவினால் கேடு வரும் எனின் - ஒப்புரவு செய்தலான் ஒருவனுக்குப் பொருட்கேடு வரும் என்பார் உளராயின், அஃது ஒருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து - அக்கேடு தன்னை விற்றாயினும் கொள்ளும் தகுதியை உடைத்து. (தன்னைவிற்றுக் கொள்ளப்படுவதொரு பொருள் இல்லை அன்றே? இஃதாயின் அதுவும் செய்யப்படும் என்றது, புகழ் பயத்தல் நோக்கி. இதனான் ஒப்புரவினால் கெடுவது கேடு அன்று என்பது கூறப்பட்டது.).
English Translation:
By good if ruin comes across Sell yourself to save that loss
By good if ruin comes across Sell yourself to save that loss
English Explanation:
If it be said that loss will result from benevolence, such loss is worth being procured even by the sale of ones self
If it be said that loss will result from benevolence, such loss is worth being procured even by the sale of ones self
English Couplet:
Though by beneficence, the loss of all should come,Twere meet man sold himself, and bought it with the sum
Though by beneficence, the loss of all should come,Twere meet man sold himself, and bought it with the sum
Paul Name: Virtue (Araththuppaal),
Iyal Name: Domestic Virtue (Illaraviyal),
Adikaram: Duty to Society (Oppuravaridhal)
Iyal Name: Domestic Virtue (Illaraviyal),
Adikaram: Duty to Society (Oppuravaridhal)