
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை
Ketuppadhooum Kettaarkkuch Chaarvaaimar Raange
Etuppadhooum Ellaam Mazhai
குறள் எண்: | 15 | |
---|---|---|
குறளின் பால்: | அறத்துப்பால் | |
அதிகாரம் : | வான்சிறப்பு | |
குறளின் இயல்: | பாயிரவியல் |
குறளின் விளக்கம்
மு.வரதராசன் விளக்கம்:
பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை, மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்சாலமன் பாப்பையா விளக்கம்:
பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும், பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்கலைஞர் விளக்கம்:
பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்மணக்குடவர் விளக்கம்:
பெய்யாது நின்று எல்லாப் பொருளையுங் கெடுப்பதும் அவை கெடப் பட்டார்க்குத் துணையாய்த் தான் பெய்து பொருள்களெல்லாவற்றையும் அவ்விடத்தே யுண்டாக்குவதும் மழை. இஃது இரண்டினையுஞ் செய்யவற்றென்றவாறு.வீ. முனிசாமி விளக்கம்:
பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும், கெட்டார்க்குத் துணையாய் நின்று, பெய்து காப்பாற்றுவதும் ஆகிய எல்லாம் மழையே யாகும்.பரிமேலழகர் விளக்கம்:
கெடுப்பதூஉம் - பூமியின்கண் வாழ்வாரைப் பெய்யாது நின்று கெடுப்பதூஉம், கெட்டார்க்குச்சார்வாய் மற்று ஆங்கேஎடுப்பதூஉம்-அவ்வாறு கெட்டார்க்குத் துணையாய்ப் பெய்து முன் கெடுத்தாற் போல எடுப்பதூஉம், எல்லாம் மழை - இவை எல்லாம் வல்லது மழை. ( மற்று வினை மாற்றின்கண் வந்தது, ஆங்குஎன்பது மறுதலைத் தொழிலுவமத்தின்கண் வந்த உவமச்சொல். கேடும் ஆக்கமும் எய்துதற்கு உரியார் மக்கள் ஆதலின், கெட்டார்க்கு என்றார் . எல்லாம் என்றது, அம்மக்கள் முயற்சி வேறுபாடுகளால் கெடுத்தல் எடுத்தல்கள் தாம் பலவாதல் நோக்கி. வல்லது என்பது அவாய் நிலையான் வந்தது. மழையினது ஆற்றல் கூறியவாறு.).
English Translation:
Destruction it may sometimes pour But only rain can life restore
Destruction it may sometimes pour But only rain can life restore
English Explanation:
Rain by its absence ruins men, and by its existence restores them to fortune
Rain by its absence ruins men, and by its existence restores them to fortune
English Couplet:
Tis rain works all: it ruin spreads, then timely aid supplies,As, in the happy days before, it bids the ruined rise
Tis rain works all: it ruin spreads, then timely aid supplies,As, in the happy days before, it bids the ruined rise
Paul Name: Virtue (Araththuppaal),
Iyal Name: Prologue (Paayiraviyal),
Adikaram: The Blessing of Rain (Vaansirappu)
Iyal Name: Prologue (Paayiraviyal),
Adikaram: The Blessing of Rain (Vaansirappu)