Thirukkural No: 308/1330



இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று

Inareri Thoivanna Innaa Seyinum
Punarin Vekulaamai Nandru

குறள் எண்: 308
குறளின் பால்: அறத்துப்பால்
அதிகாரம் : வெகுளாமை
குறளின் இயல்: துறவறவியல்

குறளின் விளக்கம்

மு.வரதராசன் விளக்கம்:

பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.

சாலமன் பாப்பையா விளக்கம்:

பல சுடரை உடைய பெருநெருப்பு நம் மீது பட்டது போன்ற தீமையை ஒருவன் நமக்குச் செய்தாலும், நம்மால் கோபம் கொள்ளாதிருக்க முடியுமானால் அது நம் உடலுக்கும் நல்லது.

கலைஞர் விளக்கம்:

தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும் போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது

மணக்குடவர் விளக்கம்:

சினத்தைப் பொருளாகக் கொண்டவன் கெடுதல், நிலத்தெறிந்தவன்கை தப்பாமற் பட்டதுபோலும், இது பொருட்கேடு வருமென்றது.

வீ. முனிசாமி விளக்கம்:

பல சுடர்களையுடைய பெரிய எரி (செருப்பு) எல்லாம் வந்து ஒன்றாகச் சேர்ந்து போன்ற துன்பத்தினை ஒருவன் செய்தாலும், கூடுமானால் அவன்மீது கோபிக்காதிருத்தல் நல்லது.

பரிமேலழகர் விளக்கம்:

இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும் - பல சுடரை உடைத்தாய பேரெரி வந்து தோய்ந்தாலொத்த இன்னாதவற்றை ஒருவன் செய்தானாயினும்; வெகுளாமை புணரின் நன்று - அவனை வெகுளாமை ஒருவற்குக் கூடுமாயின் அது நன்று. (இன்னாமையின் மிகுதி தோன்ற 'இணர் எரி' என்றும், அதனை மேன்மேலும் செய்தல் தோன்ற 'இன்னா' என்றும், அச்செயல் முனிவரையும் வெகுள்விக்கும் என்பது தோன்றப் 'புணரின்' என்றும் கூறினார். இதனான் வெகுளாமையது நன்மை கூறப்பட்டது.).
English Translation:
Save thy soul from burning ire Though tortured like the touch of fire
English Explanation:
Though one commit things against you as painful (to bear) as if a bundle of fire had been thrust upon you, it will be well, to refrain, if possible, from anger
English Couplet:
Though men should work thee woe, like touch of tongues of fireTis well if thou canst save thy soul from burning ire
Paul Name: Virtue (Araththuppaal),
Iyal Name: Ascetic Virtue (Thuravaraviyal),
Adikaram: Restraining Anger (Vekulaamai)

Search Incoming Terms:

குறள் 308, இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் குறள் பொருள், அறத்துப்பால் திருக்குறள், துறவறவியல் திருக்குறள், வெகுளாமை திருக்குறள், இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் திருக்குறளின் விளக்கம், inareri thoivanna innaa seyinum thirukkural explanation, araththuppaal thirukkural, thuravaraviyal thirukkural, vekulaamai thirukkural, inareri thoivanna innaa seyinum thirukkural meaning in tamil and english

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...