
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்
Andhanar Enpor Aravormar Revvuyir
Kkum Sendhanmai Poontozhuka Laan
குறள் எண்: | 30 | |
---|---|---|
குறளின் பால்: | அறத்துப்பால் | |
அதிகாரம் : | நீத்தார் பெருமை | |
குறளின் இயல்: | பாயிரவியல் |
குறளின் விளக்கம்
மு.வரதராசன் விளக்கம்:
எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்சாலமன் பாப்பையா விளக்கம்:
எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர், அவரே அந்தணர்கலைஞர் விளக்கம்:
அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்மணக்குடவர் விளக்கம்:
எல்லாவுயிர்க்குஞ் செவ்விய தட்பஞ்செய்தலை மேற்கொண்டொழுகலானே, அந்தணரென்போரும் துறந்தாராகக் கொள்ளப்படுவர். மேல் துறந்தவர்களினுஞ் சிறியாருளரென்று கூறினார். இதனானே துறவாதாரினும் பெரியாருளரென்று கூறினார். இவை யெட்டானும் துறவறத்தின் பெருமை கூறப்பட்டது.வீ. முனிசாமி விளக்கம்:
எல்லா உயிர்களிடத்திலும் அருளுடன் நடந்துகொள்ளுவதால் அந்தணர் என்று சொல்லவப்படுபவர் அறவோர்களாகிய முனிவர்களே யாவார்கள்.பரிமேலழகர் விளக்கம்:
எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் - எல்லா உயிர்கள் மேலும் செவ்விய தண்ணளியைப் பூண்டு ஒழுகலான், அந்தணர் என்போர் அறவோர் - அந்தணரென்று சொல்லப்படுவார் துறவறத்தில் நின்றவர். (பூணுதல் விரதமாகக் கோடல். அந்தணர் என்பது அழகிய தட்பத்தினை உடையார் என ஏதுப்பெயர் ஆகலின், அஃது அவ்வருளுடையார் மேலன்றிச் செல்லாது என்பது கருத்து. அவ்வாறு ஆணையுடையாராயினும் உயிர்கண்மாட்டு அருளுடையர் என்பது இதனால் கூறப்பட்டது.
English Translation:
With gentle mercy towards all, The sage fulfils the vitues call
With gentle mercy towards all, The sage fulfils the vitues call
English Explanation:
The virtuous are truly called Anthanar, because in their conduct towards all creatures they are clothed in kindness
The virtuous are truly called Anthanar, because in their conduct towards all creatures they are clothed in kindness
English Couplet:
Towards all that breathe, with seemly graciousness adorned they live,And thus to virtues sons the name of Anthanar men give
Towards all that breathe, with seemly graciousness adorned they live,And thus to virtues sons the name of Anthanar men give
Paul Name: Virtue (Araththuppaal),
Iyal Name: Prologue (Paayiraviyal),
Adikaram: The Greatness of Ascetics (Neeththaar Perumai)
Iyal Name: Prologue (Paayiraviyal),
Adikaram: The Greatness of Ascetics (Neeththaar Perumai)